இன்னைக்கு டிபன் நல்லா இருந்துச்சா பாப்பா?!: பரிமாறிக் கொண்டே ஆய்வு செய்த உதயநிதி..!

இன்னைக்கு டிபன் நல்லா இருந்துச்சா பாப்பா?!: பரிமாறிக் கொண்டே ஆய்வு செய்த உதயநிதி..!



udayanidhi-stalin-inspected-the-breakfast-program-provi

திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தந்தார். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு இன்று காலை வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார். 

உணவின் தரத்தை ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு அவரே உணவு வழங்கினார். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவை தானும் சாப்பிட்டு, தினமும் நல்ல உணவு வழங்கப்படுகிறதா, என குழந்தைகளிடம் கேட்டறிந்தார். அதற்கு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பதிலளித்தனர். பின்னர் அவர்களுடன் இணைந்து அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

பள்ளியில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிடம் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தார். மேலும் ஆசிரியர்களிடம், குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அதன்பிறகு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த வீரர்களுடன், கலந்துரையாடி அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்து, அதனை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். 

அதன்பின்னர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அடையாள அட்டைகள், வழங்கினார். அதனைத் தொடர்ந்து வாலிபால் மைனதானத்தின் கேலரிக்கான அடிக்கல் நாட்டினார்.