திடீர் ட்விஸ்ட்! துணை முதல்வர் பதவி... முதல்வர் விஜய் போன் காலில் சொன்ன அந்த ஒரு வார்த்தை! சீக்ரெட்டை உடைத்த திருமாவளவன்....!!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தன்னை துணை முதல்வராக நியமிப்பது தொடர்பாக பரவிய விவாதங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போதைக்கு யாருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கும் திட்டம் இல்லை என்று தமிழக முதல்வர் விஜய் தன்னிடம் நேரடியாக தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய திருமாவளவன், சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த துணை முதல்வர் பதவி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது முதல்வருடன் நடைபெற்ற உரையாடல் பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்....திருமாவளவன் திடீரென பின்வங்கினார்! முடிவை மாற்றியதால் அரசியலில் புதிய பரபரப்பு.!!!
முதல்வருடன் நேரடி உரையாடல்
தொலைபேசி வாயிலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தற்போதைய சூழலில் யாருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கும் எண்ணம் இல்லை என்று முதல்வர் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். அதற்கு பதிலளித்த தானும் அத்தகைய பதவியை எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாக குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் இடம் தருவதாக உறுதி
மேலும் பேசிய அவர், தங்களது கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததாக தெரிவித்தார். அதே நேரத்தில் பதவி தொடர்பான எந்தவித எதிர்பார்ப்பும் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவிடமும் தெரிவித்தேன்
இந்த உரையாடலுக்குப் பிறகு, விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை தொடர்புகொண்டு, தற்போதைக்கு தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக திருமாவளவன் கூறினார்.
துணை முதல்வர் பதவி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், திருமாவளவனின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: விசிக கட்சி 100% தேர்தல் களத்தில் போட்டியிடாது...! காலையிலேயே திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு.!!!