யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.... கடைசி நேரத்தில் செங்கோட்டையன் பதவி பறிப்பு.! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!!



sengottaiyan-finance-portfolio-change-tvk-government

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கடைசி நேரத்தில் நடந்த முக்கிய மாற்றமாக, செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் திடீர் முடிவு அல்ல என்றும், அதற்கு பின்னால் முக்கிய ஆலோசனைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழக (தவெக) உட்கட்சி வட்டாரங்கள் கூறுவதன்படி, இந்த மாற்றம் செங்கோட்டையனின் முழு ஒப்புதலுடனேயே நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தற்போதைய அரசின் நிதிநிலை மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து அவர் முன்கூட்டியே முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிருப்தி! செங்கோட்டையனின் நிதித்துறை பதவி பறிப்பு..... தவெக அமைச்சரவையில் நடந்த திடீர் மாற்றம்!!!

நிதிச்சுமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை

தகவலின்படி, மாநில அரசு தற்போது கடுமையான நிதிச்சுமையில் இருப்பதால், நிதித்துறை பொறுப்பை கவனிப்பது அரசியல் ரீதியாக கூடுதல் அழுத்தத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தக்கூடும் என செங்கோட்டையன் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் எதிர்க்கட்சிகளின் தாக்குதல் மட்டுமல்லாமல், பொருளாதார முடிவுகள் தொடர்பான சர்ச்சைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.

அனுபவத்தை கருத்தில் கொண்டு புதிய பொறுப்பு

இதையடுத்து, நிர்வாக அனுபவம் அதிகமுள்ள செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அவசரகால நடவடிக்கைகளில் நேரடி பங்கு வகிப்பதால், அவரின் அனுபவம் அரசுக்கு உதவும் என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு நடந்த இந்த அதிரடி மாற்றம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: விசில் பறக்கப்படும் விசிக கட்சி! கோட்டையை அதிரவைத்த திருமாவளவன் ஒற்றை வார்த்தை.! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!