அய்யோ பாவம்...முதலையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபர்! கடைசியில் நேர்ந்த விபரீதம்!



Philippines Zoo Incident: Crocodile Bites Man During Selfie Stunt

மணிலா, பிலிப்பைன்ஸ்

சுற்றுலா பயணிகள் பரவலாக செல்லும் இடங்களில் ஒன்றான பிலிப்பைன்ஸின் ஜாம்போங்கா சிபுகே மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா, சமீபத்தில் ஒரு சோககர சம்பவத்துக்கான இடமாக மாறியது.

29 வயதுடைய ஒரு வாலிபர், தனது நண்பர்களுடன் பூங்காவிற்கு சென்றிருந்தார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளான சிங்கம், முதலை போன்றவற்றைப் பார்வையிடும் போது, அவர் ஒரு மோசமான முடிவை எடுத்தார். பாதுகாப்பு தடுப்பு வேலியை மீறி, அங்கிருந்த ஒரு முதலையின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றார்.

அந்த தருணமே அவனது வாழ்க்கையின் பயங்கர தருணமாக மாறியது. நெருங்க வந்ததும், முதலை திடீரென அவரது கையை கடித்தது. வலியில் அலறி துடித்த அவர், சுமார் அரை மணி நேரம் முதலையின் பிடியிலிருந்து விடுபட போராடினார்.

இதையும் படிங்க: வைரல் வீடியோ : வானில் பறந்து செல்லும் மீனின் அதிர்ச்சியூட்டும் காட்சி! கழுகு வேட்டை இப்படித்தான் இருக்கும் போல.....

இறுதியில் பூங்கா பணியாளர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சேர்ந்து அவரை மீட்டனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், தற்போது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு விதிகளை மதிப்பது மிக முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறது. விலங்குகளின் நடத்தை எப்போது எவ்வாறு மாறும் என்பது யாருக்கும் கூற முடியாது. பாதுகாப்பு விதிகளை மீறினால் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்க முடியும் என்பதற்கான உயிருள்ள உதாரணம்தான் இந்த சம்பவம்.

 

 

 

 

இதையும் படிங்க: அடடே... மலைப்பாம்பு முட்டையிடும் அதிசயக் காட்சி! இணையத்தில் வைரலாகும் காணொளி....