மீண்டும் வந்த கருணாநிதி., நெகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்..!!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் அடித்தளத்தில் வாகனம் நிறுத்துமிடம், செய்தி நாளிதழ், நூல் கட்டும் பிரிவு போன்றவை இடம்பெற்றுள்ளது.
தரைத்தளத்தில், கலைக்கூடம், மாற்றத்திறனாளிகள் பிரிவு, மாநாட்டு கூடம், சொந்த நூல் படிக்கும் பிரிவு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நவீன தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி அருகில் அமர்ந்து பேசுவது போல அப்படியே திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகம் ததும்ப முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் துரைமுருகனும் கருணாநிதியுடன் பேசி நெகிழ்ந்துள்ளனர்.