நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனி - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!



  Edappadi Palanisamy on Chain Snatching 19 Jan 2025 

சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர், சம்பவத்தன்று இரவில் பணி முடித்து வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் வாசலில் அவரின் 5 சவரன் தங்க நகை மர்ம நபரால் கொள்ளையடித்து செல்லப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண் காவலரின் நகைகள் பறித்து செல்லப்பட்ட விஷயத்தில் பாஜக அண்ணாமலை தனது கண்டனத்தை நேற்று பதிவு செய்திருந்தார். இதனிடையே, இன்று எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டன பதிவை வெளியிட்டு இருக்கிறார். 

எடப்பாடி பழனிச்சாமி: 

இந்நிலையில், இந்த விஷயம் தொடர்பாக அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடபப்டி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது.

இதையும் படிங்க: இவர்தான் அந்த சார்.. வீதி வீதியாக போஸ்டருடன் களமிறங்கிய திமுக நிர்வாகி.! 

நேற்று ஒரே நாளில் சென்னை தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன

edappadi palanisamy.

ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.  

ஸ்டாலின் மாடல் அரசு

தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை; இந்த நிலைக்கு காரணமான நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனிய வேண்டும். 

நகைப் பறிப்பு போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திரு. ஸ்டாலின் அவர்களே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்!

நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சுய விளம்பரங்களில் செலுத்தும் அதே கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக-வின் முக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு; சட்டப்பேரவைக்கு வருகை தரவில்லை..!