BREAKING : அதிமுக அலுவலகத்தை பயன்படுத்த சி.வி.சண்முகம் - பசுபதி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடுமையாக மோதல்! விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு...!!!
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை மையமாக கொண்டு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் போலீசார் இடையே நேரடி மோதல் உருவானது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததாக சி.வி.சண்முகம் மீது கட்சிக்குள் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரை விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, பசுபதியை புதிய மாவட்டச் செயலாளராக நியமித்தார்.
இதையும் படிங்க: BREAKING: விஜய்யை பக்கத்தில் பார்க்கும் ஆசையில் வாகனத்தை பின்தொடர்ந்ததால் கீழே விழுந்து இளைஞரின் மண்டை உடைந்தது…!!!
அலுவலக கட்டுப்பாட்டை கைப்பற்ற முயற்சி
புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கையில் இறங்கினர். அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும், எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உளவுத்துறை எச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு போலீசார் உடனடியாக பாதுகாப்பை அதிகரித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகத்தின் பிரதான வாயிலில் மாற்றுப் பூட்டு போடப்பட்டது. மேலும், 'வஜ்ரா' வாகனத்துடன் ஆயுதப்படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
இந்த நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சக்திவேல் தலைமையில் வாகனங்களில் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் போலீசாரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் செல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறது” என கூறி அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நிலைமை தள்ளுமுள்ளுவாக மாறியதால், போலீசார் ஆதரவாளர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றி கைது செய்தனர்.
சி.வி.சண்முகம் வருவதாக தகவல்
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் AIADMK மூத்த தலைவர் சி.வி.சண்முகம் நேரடியாக அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
உடனடியாக போலீசார் அலுவலகம் முன்பு இரும்புத் தடுப்புகள் அமைத்து, முழுப் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும், அலுவலகம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர் மாற்றத்தைத் தொடர்ந்து அதிமுகவின் இரு தரப்பினரிடையே உருவான இந்த மோதல், விழுப்புரம் மாவட்ட அரசியலில் மட்டுமல்லாமல் மாநில அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
#JustNow || விழுப்புரம் அ.தி.மு.க அலுவலகத்தை பயன்படுத்த இருதரப்பு இடையே போட்டி.. அலுவலகத்திற்கு பூட்டு போட்ட காவல் துறையினர்#Viluppuram | #ADMK | #EPS | #CVShanmugam | #PolimerNews pic.twitter.com/JB7OmkDu3Q
— Polimer News (@polimernews) May 16, 2026