முதலமைச்சர் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறாக புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி..!! 



bjp-executive-published-defamatory-photo-of-chief-minis

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரை இழிவு படுத்தி பேசுவதும், அவதூறாக நடத்துவதும் வழக்கமாகி போன ஒன்றாகி விட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல்துறையினரிடம் இது குறித்து திமுக நிர்வாகி புகார் அளித்துள்ளார். பின்னர் பாஜக நிர்வாகி ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்துள்ளனர்.