திட்டமிட்ட சதிவேலையா? 4 அதிமுக MLA-க்கள் ராஜினாமாவின் பின்னணியில் இருக்கும் அந்த ரகசியம்... தராசு ஷ்யாம் உடைத்த அதிரடி உண்மை.!!!
தமிழக அரசியலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமா நடவடிக்கைகள் புதிய அரசியல் மற்றும் சட்ட விவாதங்களை கிளப்பியுள்ளன. சபாநாயகர் எடுத்த முடிவுகள் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டவையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் இதுகுறித்து விரிவாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ராஜினாமா ஏற்கும் முன் கட்டாயமாக விசாரணை தேவை
தராசு ஷ்யாம் கூறுகையில், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ராஜினாமா எந்தவித அழுத்தமோ, பேரமோ, ஆசை வார்த்தைகளோ இன்றி முழுமையாக அவரது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதா என்பதை சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும் என்றார். வெறுமனே கைப்பட எழுதப்பட்ட ராஜினாமா கடிதத்தைப் பெற்றவுடன் அதை ஏற்றுக்கொள்வது அரசியல் சாசனத்தின் நோக்கத்துக்கு ஏற்ப இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: எடப்பாடி அடுத்த 15 நாட்களில் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!!
கட்சித் தாவல் தடைச் சட்டம் குறித்து எழும் கேள்விகள்
சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சியின் கொரடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள், பத்தாவது அட்டவணையின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட வேண்டியவர்கள் என ஷ்யாம் விளக்கினார். குரல் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதால் 25 அதிமுக உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தது அவைப் பதிவில் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 21 பேரை மட்டும் உட்கட்சி மன்னிப்பு என்ற பெயரில் ஏற்றுக்கொண்டு, மீதமுள்ள 4 பேரின் ராஜினாமாவை அங்கீகரித்தது சட்ட ரீதியாக பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் தாமதம் ஏன்?
இந்த நான்கு தொகுதிகளுக்கும் இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததற்கு, நிலவும் சட்டச் சிக்கல்களே காரணமாக இருக்கலாம் என்று தராசு ஷ்யாம் கருதுகிறார். 2018-ஆம் ஆண்டு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின்போது, நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பின்னரே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்ததை அவர் நினைவுபடுத்தினார். தற்போதைய சூழலிலும் நீதிமன்றத் தீர்ப்புகள் வரும்வரை இடைத்தேர்தல் தொடர்பான முடிவு தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த எச்சரிக்கை
மேலும், மத்திய அரசு முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறை அமலுக்கு வந்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் போகும் வாய்ப்பும் இருப்பதாக அவர் எச்சரித்தார். தற்போது அந்த நான்கு தொகுதிகளுக்கும் பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், இந்த விவகாரம் எதிர்காலத்தில் கட்சி மாற நினைக்கும் அரசியல்வாதிகளிடையே சட்ட ரீதியான எச்சரிக்கையாக அமையும் என்றும் தராசு ஷ்யாம் தனது பேட்டியில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலையின் வருகையோ, விலகலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது! கட்சிக்கு லாபமும் இல்லை.. நஷ்டமும் இல்லை! தமிழிசையின் காரசாரமான பேச்சு..!!!!