ஆண்மை குறைபாடு சரி செய்யும் சித்தர்களின் மூலிகை இலை.? எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.!?

ஆண்மை குறைபாடு சரி செய்யும் சித்தர்களின் மூலிகை இலை.? எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.!?



How to cure sexual intercourse problems for men

தற்போதுள்ள நவீன ஊட்டச்சத்து குறைந்த உணவு பழக்கங்களினாலும், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையினாலும் ஆண்கள் பலர் ஆண்மை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்மை குறைபாடு பிரச்சனையை ஆங்கில மருந்துகளின் மூலம் எளிதாக சரிசெய்ய முடியவில்லை என்றாலும், ஒரு சில பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

siddha

ஆனால் அப்படிப்பட்ட ஆங்கில மருந்துகளால் தீர்க்க முடியாத, ஆண்மை குறைபாடு, விந்தணு எண்ணிக்கை குறைபாடு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகளையும் சித்த வைத்தியம் முறைப்படி தீர்த்து வைக்கலாம் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

குறிப்பாக சித்தர்களின் மூலிகை இலையான அம்மான் பச்சரிசி இலையை பயன்படுத்தி ஆண்மை குறைபாடு மற்றும் தாம்பத்திய உறவு சம்பந்தப்பட்ட அனைத்து வகையான பிரச்சனைகளையும் சரி செய்யலாம். அம்மான் பச்சரிசி இலையை நிழலில் காய வைத்து நன்றாக அரைத்து பொடி செய்து பாலில் கலந்து இரவில் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளும் சரியாகும்.

siddha

மேலும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டி, கர்ப்பப்பை சுருக்கம், கர்ப்பப்பை இறக்கம், பிறப்புறுப்பில் வறட்சி போன்ற பல பிரச்சனைகளையும் இந்த மூலிகை இலை தீர்த்து வைக்கிறது. இதை பால் மற்றும் நீரில் கலந்து குடித்து வரலாம். ஆனால் சுவைக்காக சர்க்கரை அல்லது தேன் போன்றவற்றை சேர்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.