பப்பாளி இலை சாறு குடிப்பதால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

நம்மில் பலருக்கும் பப்பாளி மரத்தில் காய்க்கும் பழங்களை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் அந்த பப்பாளி மரத்தின் இலை நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல்வேறு வகையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அந்த பப்பாளி இலைகளை சாறு, பொடி, கசாயம் என்ன எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
பப்பாளி இலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ சி இ மற்றும் கே போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது.
பப்பாளி இலை கசாயம் செய்வது எப்படி?
பப்பாளி இலையை தண்டுகள் இல்லாமல் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் சீரகம் மற்றும் இஞ்சி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீர் கொதித்து 2 டம்ளராக வந்த பின் அந்த கசாயத்தை நாம் குடிக்கலாம். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு 10 முதல் 60 மில்லி வரை கொடுக்கலாம். பெரியவர்கள் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கிறது. பொதுவாக மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய மலேரியா, டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற காய்ச்சல்களுக்கு சிறந்த தீர்வாக பயன்படுகிறது.
அதிலும் குறிப்பாக நமது உடலில் ரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, செல்கள் அழிவதை தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து வயிற்று புண் களையும் ஆற்ற உதவுகிறது.