கணவன் அசிங்கமாக இருந்ததால் உதட்டை கடித்து துப்பிய மனைவி! டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்!

கணவன் அசிங்கமாக இருந்ததால் உதட்டை கடித்து துப்பிய மனைவி! டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்!



Wife bite husband lips in delhi

தலைநகர் டெல்லியில் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவன் முத்தமிடும்போது அவரது நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு, டெல்லியிலுள்ள ரஹோலா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் கணவர் அழகாக இல்லை யனென்பதை நினைத்து மனவேதனையில் இருந்துள்ளார் மனைவி. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. 

Couples fight

சம்பவத்தன்றும் இருவரும் அதிக நேரம் சண்டையிட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்னர். சண்டை முடிந்து சமாதானமான தமபதியினர் சிறிதுநேரம் கழித்து ஓன்று சேர்ந்துள்ளனர். அப்போது கணவர் அவரது மனைவியை முத்தமிட முயற்சித்துள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவரது மனைவி அவரது நாக்கு துண்டாகும் அளவிற்கு பலமாக கடித்துள்ளார். வலியில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இனி இவரால் பேசிய முடியுமா என்பது சந்தேகம் என்று சொல்லிவிட்டதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் எட்டுமாத கர்ப்பிணியாக இருந்த காஜல், தற்போது போலிஸாரால், ஐபிசி 325 பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணமானது குறிப்பிடத்தக்கது.