நண்பருடன் மனைவியை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய கணவன்; நைட் பார்ட்டியில் பகீர்.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை.!

நண்பருடன் மனைவியை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய கணவன்; நைட் பார்ட்டியில் பகீர்.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை.!



Uttar Pradesh Noida Wife Swapping Case 8 Arrested 

File Pic

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் பெண்மணி, தனது கணவர் மீது கடந்த ஜூன் 23ம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "நான் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரை பூர்வீகமாக கொண்டவர். 

வேலைக்காக நொய்டாவில் தங்கி இருந்தேன். அப்போது, முராதாபாத் பகுதியை சேர்ந்த நபரின் அறிமுகம் ஏற்பட்டு, நாங்கள் காதல் வயப்பட்டோம். பின் இருவரும் திருமணம் செய்து, நொய்டாவில் எனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறோம். 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி எனது கணவர் பார்ட்டிக்கு செல்லலாம் என அழைத்து சென்றார். அங்கு எனது கணவரின் நண்பர்கள் அவர்களின் மனைவியுடன் வந்தார்கள். அனைவரும் மதுபானம் அருந்திய நிலையில், என்னையும் வற்புறுத்தி அருந்த வைத்தனர்.

Uttar pradesh

அனைவருக்கும் போதை ஏறியதும் எனது கணவர் அவரின் நண்பருடன் படுக்கையை பகிர வற்புறுத்தினார். நான் மறுப்பு தெரிவித்தேன். எனது கணவரின் நண்பரின் மனைவியுடன் எனது கணவர் உறவு கொள்ள தயாரானார். அவர் தனது கணவரிடம் சண்டையிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சமீபகாலமாகவே எனது கணவரின் தாய், என்னை மார்டன் உலகத்திற்கு ஏற்ப நடந்துகொள் என வற்புறுத்தி வருகிறார். இவர்கள் கும்பலாக சேர்ந்து மனைவி மாற்றும் கும்பலை போல செயல்படுவதாக இருக்கிறது. அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி தற்போது வரை 8 பேரை கைது செய்துள்ளனர். பெரு நகரங்களில் மனைவிகளை பரிமாறிக்கொள்ளும் வழக்கமும், அதனை வைத்து இலாபமடையும் கும்பலின் அதிர்ச்சி செயலும் அம்பலமாவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.