நடந்து சென்ற இளைஞரை, காவு வாங்கிய சம்பவம்.! திருடன் என நினைத்து பகீர்.!

நடந்து சென்ற இளைஞரை, காவு வாங்கிய சம்பவம்.! திருடன் என நினைத்து பகீர்.!



Uttar pradesh men attack and killed for doubtful as theft

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் 24 வயதான அனில் குமார் என்ற இளைஞர் மர சாமான்கள் விற்பனை செய்கின்ற கடைக்கு அருகில் இரவில் நடந்து சென்றுள்ளார். அந்தக் கடையில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது.

theft

எனவே அணில் குமாரும் அங்கு திருடுவதற்கு வந்திருப்பார் என்று சந்தேகப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அணில் குமாரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் வெகுவாக காயமடைந்த அணில் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

theft

அப்போது அவரை தாக்கியவர்கள் அங்கேயே போட்டுவிட்டு ஓடிள்ளனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தாக்குதலில் ஈடுபட்ட  ஷுபான் கான் (24), அக்லக் கான் (26) மற்றும் நௌஷாத் (20) ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.