கணவனை இழந்த அண்ணியை பலவந்தப்படுத்தி கற்பழித்த கொழுந்தன்.. விசாரணையில் அதிர்ச்சி..! வீட்டில் பிரசவம்.!

கணவனை இழந்த அண்ணியை பலவந்தப்படுத்தி கற்பழித்த கொழுந்தன்.. விசாரணையில் அதிர்ச்சி..! வீட்டில் பிரசவம்.!


uttar-pradesh-kanpur-widow-girl-sexual-abused-by-brothe

அண்ணி கணவரை இழந்த நிலையில், மைத்துனன் என்ற கொழுந்தன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பயங்கரம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியை சார்ந்த பெண்மணி, தனது கணவரை இழந்து 3 குழந்தைக்குகளுடன் வசித்து வந்துள்ளார். பெண்மணிக்கு உதவி செய்வதாக இறந்த கணவரின் சகோதரர் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று பெண்மணி வீட்டில் தனியாக இருக்கையில், அவரது மைத்துனர் பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். 

Uttar pradesh

மேலும், குழந்தைகளை கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன பெண்மணியும் தனக்கு நடந்த துயரத்தை வெளியே கூறாமல் இருந்து வந்த நிலையில், அதனை பயன்படுத்தி பலமுறை அண்ணியை மைத்துனர் பலவந்தப்படுத்தி இருக்கிறார். 

இதனால் பெண்மணி தற்போது கர்ப்பிணியான நிலையில், பிரசவ தேதியும் வந்துள்ளது. அதற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று அனுமதியாகவே, அவர்கள் பிரசவத்திற்கு இன்னும் சில மணிநேரம் ஆகும் என்றும், நீங்கள் காத்திருங்கள் என்றும் கூறியதாக தெரியவருகிறது. 

Uttar pradesh

மருத்துவ ஊழியர்களின் கூற்றால் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய பெண்மணி, வீட்டிலேயே குழந்தையினை பெற்றெடுத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரியவந்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண்மணியிடம் எழுத்துப்பூர்வ புகாரை பெற்ற காவல் துறையினர், பெண்ணின் மைத்துனரை தேடி வருகின்றனர்.