நொடியில் ஏற்பட்ட மரணம்.. மாரடைப்பால் பலியான இளைஞர்., உதவி செய்ய முன்வராத மக்கள்.! நெஞ்சை உலுக்கும் காணொளி.!

நொடியில் ஏற்பட்ட மரணம்.. மாரடைப்பால் பலியான இளைஞர்., உதவி செய்ய முன்வராத மக்கள்.! நெஞ்சை உலுக்கும் காணொளி.!



Uttar Pradesh Firozabad 35 Aged Man Died by Heart Attack in Road 

 

இன்றளவில் இளம் தலைமுறை முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. இதற்கான மருத்துவ கரணங்கள் கண்டறியப்பட வேண்டியதன் அவசியம் உருவாகி இருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள போரோசாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுனில் சர்மா (வயது 35). இவர் சம்பவத்தன்று அங்குள்ள கடைவீதிப்பகுதியில் சென்று கொண்டு இருந்தார். 

அச்சமயம், அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்த அவர், சாலையிலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

சாலையில் சுனில் சர்மா மயங்கியதை கண்ட மக்கள், எவ்வித இறக்கமும் இன்றி அவர்களின் வேலைகளை கவனித்தவாறு இருந்தனர். மேலும், அவர் போதையில் விழுந்து இருக்கலாம் என எண்ணி இருக்கின்றனர். 

பின் தாமதமாக அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அவரின் மாரடைப்பு மரணம் உறுதியாகி இருக்கிறது.