30 அடி உயரத்தில் ஜாலியாக ஜிப் லைன் சென்ற சிறுமி! தீடீரென கயிறு அறுந்து கீழே விழுந்த சிறுமி! திக் திக் வீடியோ காட்சி!

மணாலியில் ஜிப் லைன் விபத்து
ஹிமாசலப் பிரதேசத்தின் மணாலி சுற்றுலா பகுதிக்கு ஜூன் 8ஆம் தேதி பயணித்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி திரிஷா பிஜ்வே, ஜிப் லைன் சவாரி செய்தபோது ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுமி
சுற்றுலா அனுபவம் பெற வந்த திரிஷா, ஜிப் லைன் பயணத்தில் கலந்து கொண்ட போது, நடுவழியில் கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து தரையில் நேராக விழுந்தார். இந்த சம்பவம் மொபைல் வீடியோவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பலத்த காயங்களால் மருத்துவமனை அனுமதி
விழுந்ததும், திரிஷாவுக்கு கால்களில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. தற்காலிகமாக மணாலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை, பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்திகர் மருத்துவமனைக்கு மாற்றினர்.
இதையும் படிங்க: வாய்க்கு அருகே பாம்பை கொண்டு சென்றவர்க்கு என்ன ஆச்சு பாருங்க. வைரல் வீடியோ.
பாதுகாப்பு இல்லை என புகார்
திரிஷாவின் குடும்பத்தினர், சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்துக்குப் பிறகு உடனடி உதவி கிடைக்கவில்லை என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய திரிஷா
தற்போது திரிஷா சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். இச்சம்பவம், சுற்றுலா அனுபவங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை தூண்டியுள்ளது.
HP : मनाली में जिप लाइन टूटने से नागपुर की त्रिशा 30 फीट गहरी खाई में जा गिरी। वो घायल है और अस्पताल में इलाज चल रहा है। pic.twitter.com/mtO3zTubHk
— Sachin Gupta (@SachinGuptaUP) June 15, 2025
இதையும் படிங்க: இவ்வளவு பெரிய ராஜனாக பாம்பெல்லாம் இருக்கா?? வைரலாகும் ஷாக் வீடியோ.