காரில் வந்த மர்ம நபர்கள்... சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட இரும்புப் பெட்டி! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..... பதறவைக்கும் சம்பவம்!!!



up-kanpur-mystery-box-woman-body-police-investigation

உத்தரப் பிரதேசத்தில் சாலையோரத்தில் வீசப்பட்ட இரும்புப் பெட்டி ஒன்று பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்டியைத் திறந்த போலீசார், அதன் உள்ளே இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டுபிடித்தனர். சம்பவம் கான்பூர் அருகே நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையோரத்தில் வீசப்பட்ட சந்தேகப் பெட்டி

சாக்கியா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கான்பூர் திசையிலிருந்து வேகமாக வந்த கார் ஒன்று மேம்பாலம் அருகே திடீரென நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள், கயிற்றால் கட்டப்பட்ட கனமான இரும்புப் பெட்டி ஒன்றை சாலையோரப் புதரில் வீசிவிட்டு உடனே தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: சாலையோரம் கிடந்த பெண்ணின் சடலம்! விசாரித்த போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி! திடுக்கிடும் பின்னணி!

போலீஸ் திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி 

இதை பார்த்த கிராம மக்கள் சந்தேகத்துடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார், பெட்டியைத் திறந்து பார்த்தபோது ரத்தம் தோய்ந்த நிலையில் இளம் பெண் சடலம் இருப்பது தெரியவந்தது. உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பின்னர் பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மூன்று தனிப்படைகள்... சிசிடிவி ஆய்வு தீவிரம்

இந்த மர்ம கொலை சம்பவத்தைத் தொடர்ந்து ஏஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்ணை வேறு இடத்தில் கொலை செய்து, சடலத்தை அகற்ற இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து சுங்கச்சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலை சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

குறிப்பாக, கடந்த ஆண்டு இதே பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தையும் இது நினைவூட்டுகிறது. அந்தப் பகுதி சாலை இரண்டாகப் பிரிவதால் தப்பிச் செல்ல எளிதாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது உயிரிழந்த பெண் யார், காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நிர்வாணமாக கிடந்த இளம்பெண்ணின் சடலம்! சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை.... திருநங்கையின் தலைக்கேறிய காம வெறியால் நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்….!!!