பத்தாம் வகுப்பு தேர்வில் ஃபெயில்.. கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!!



Trending pic that 10th student fail and parents celebrate with cake

பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்த மகனை உற்சாகப்படுத்த பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டம் பசவேஷ்வர் பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் அபிஷேக்.

ஆறு பாடங்களிலும் தோல்வி

இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், 600 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் எடுத்து ஆறு பாடங்களில் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை பலரும் கிண்டல் செய்த நிலையில், மாணவரின் பெற்றோர் இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!

sslc exam

மாணவருக்கு ஆதரவாக பெற்றோர்

மேலும் மாணவருக்கு ஆதரவாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு தங்களது மகனுடன் கேக் வெட்டி அவரை உற்சாகப்படுத்தியிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: "பஸ் பயணத்தில் கள்ளக்காதல்..." வீடியோ எடுத்து மிரட்டிய கண்டக்டர்.!! போலீஸ் நடவடிக்கை.!!