பள்ளியில் இருந்து திடீரேன வெளியேறிய 7 ஆம் வகுப்பு மாணவி! பையில் சிக்கிய அந்த ஒரு கடிதம்… நடந்தது என்ன? பின்னணி பகீர் காரணம்!!!



telangana-missing-schoolgirl-found-safe-gwalior

தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து மாயமான 13 வயது மாணவி அக்ஸா ஷேக், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உறவினர் வீட்டில் பத்திரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு மாணவி மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் இருந்து திடீரென வெளியேறிய மாணவி

ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த அக்ஸா ஷேக், கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருந்தார். தகவலின்படி, மதியம் 3 மணியளவில் தனது பள்ளிப் பை மற்றும் காலணிகளை வளாகத்திலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளார். மாணவியை காணாததால் பள்ளி நிர்வாகம் தேடுதல் நடத்தியது. பின்னர் மாலை 4.15 மணியளவில் பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அய்யோ... கடவுளே! மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்! இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!!

சிசிடிவி காட்சியும் கடிதமும்

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜகித்யால் கிராமப்புற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பள்ளி வளாகத்தை விட்டு மாணவி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பின்னர் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், அவரது பள்ளிப் பையில் இருந்து கைஎழுத்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் குடும்பம் மற்றும் சில நபர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாக அவர் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

உறவினர் வீட்டில் பத்திரமாக மீட்பு

இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்திய காவல்துறையினர், வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள உறவினர் வீட்டில் அக்ஸா ஷேக் பத்திரமாக இருப்பதை உறுதி செய்தனர். மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மாணவி எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: ஒட்டிப் பிறந்த சகோதரிகள்... 10-ஆம் வகுப்பு முதல் B.Com வரை சாதனை.! எஸ்பிஐ தேர்வில் அரசு வைத்த அதிர்ச்சியால் கதறும் சகோதரிகள்...!!!