கள்ளக்காதலில் குஜாலக இருந்த காவலர்! தகராறில் தம்பதியைப் போட்டுத் தள்ளி... நள்ளிரவில் விவசாய நிலத்தில் புதைத்த கொடூரம் ..! பகீர் பின்னணி!!



suryapet-double-murder-police-officer-arrested

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் தம்பதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதே மண்டலம் பீக்கா தண்டா பகுதியைச் சேர்ந்த ராமாவாத் பூபா மற்றும் நாகுலு கொலை செய்யப்பட்ட நிலையில், காவலர் ஷரீஃப் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

விசாரணையில், நாகுலுவின் மனைவி பூபாவுக்கும் காவலர் ஷரீஃபிற்கும் இடையே நீண்டகாலமாக தகாத உறவு இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த உறவே இரட்டைக் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பெற்ற மகளை துடிதுடிக்க கொன்ற தந்தை…! வில்லியாக இருந்த சித்தி... பேத்திக்காக 2 வருடம் போராடி வென்ற தாத்தா…. பகீர் பின்னணி…!!!

தகராறுக்குப் பிறகு நடந்த கொடூரம்

சம்பவத்தன்று இரவு நாகுலு அங்கு சென்றபோது, பூபாவுக்கும் ஷரீஃபிற்கும் இடையே இருந்த உறவு தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து சென்ற ஷரீஃப், காவல் நிலையத்துக்குச் சென்று சில பழைய குற்றவாளிகளை தன்னுடன் அழைத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பின் நாகுலு மற்றும் பூபா ஆகிய இருவரையும் அவர்கள் கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர். இரட்டைக் கொலை செய்த பின்னர், உடல்களை விவசாய நிலத்துக்குக் கொண்டு சென்று அங்கு புதைத்ததாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

காவலரே முக்கிய குற்றவாளி என தகவல்

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்கள் புதைக்கப்பட்ட இடம் உள்ளிட்ட முக்கிய தடயங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவலர் ஒருவரே, பழைய குற்றவாளிகளின் உதவியுடன் தம்பதியை கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பீக்கா தண்டா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர் ஷரீஃப் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: இது என்ன புது அட்டூழியம்... மனு கொடுக்க வந்த பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ..! கோபத்தில் கொந்தளித்த முதல்வர்...!!!