அதிர்ச்சி! சோப்பு போட்டு குளிக்கும் பாம்பு! இளைஞர் செய்த காரியத்தால் வைரலாகும் வீடியோ.
அதிர்ச்சி! சோப்பு போட்டு குளிக்கும் பாம்பு! இளைஞர் செய்த காரியத்தால் வைரலாகும் வீடியோ.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். வீராதி வீரனும் பாம்பை பார்த்தாலே தலை தெறித்து ஓடுவார்கள். இப்படி இருக்க, கருநாக பாம்பு ஒன்றுக்கு சோப்பு போட்டு நல்ல நுரை வந்த பிறகு தண்ணீர் ஊற்றி அதை குளிப்பாட்டி விடுகிறார் இளைஞர் ஒருவர்.
யார் அந்த இளைஞர், எந்த ஊர் என்று எதுவும் தெரியவில்லை. குளியறையில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்துக்கொண்டு எதோ துணி துவைக்க போவதுபோல் தயாராக இருக்கும் அந்த இளைஞர் சற்றும் பயம் இன்றி கருநாக பாம்பை கையில் பிடித்து அதை குளிப்பாட்டி விடுகிறார்.
பாம்பு படம் எடுத்து நின்றாலும், தான் ஒரு பாம்பைத்தான் குளுப்பாட்டுகிறோம் என்ற பயம் அந்த இளைஞர் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. யாருப்பா சாமி நீ? என்று கேட்கும் அளவிற்கு அந்த இளைஞர் செய்துள்ள காரியம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.
எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா ..
— ஆஹான்!! 😉 (@Kadhar_Twitz) October 15, 2019
நல்ல பாம்புக்கே சோப்பு போட்டு குளிப்பாட்டிட்டு இருக்காரு😜 pic.twitter.com/D4v0YC5Ldb