" என் குழந்தைகளை திருப்பி கொடுங்கள் " நொடியில் நடந்த விபரீதம்! 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் கதறல்.... நெஞ்சை உலுக்கும் சோகம்.!!!
கங்கை நதியில் தவறி விழுந்த தம்பியைக் காப்பாற்ற முயன்ற 5 வயது சிறுமியும், 3 வயது சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தம்பியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த அக்கா
சீப்பூர் மாவட்டம் கரண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கங்கை நதிக்கரையோர வீட்டின் அருகே 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான நீரில் தவறி விழுந்தான். இதைப் பார்த்த அவனது 5 வயது அக்கா, ஒரு நொடியும் தாமதிக்காமல் கங்கை நதியில் குதித்து தம்பியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், நீரின் வேகத்தை இருவராலும் சமாளிக்க முடியாமல் சில நிமிடங்களில் மூழ்கினர்.
கிராம மக்கள் போராட்டம் பலனளிக்கவில்லை
ஆற்றின் மறுகரையில் இருந்த ஒரு வாலிபர் குழந்தைகள் நீரில் மூழ்குவதைக் கண்டு சத்தமிட்டு எச்சரித்தார். இதையடுத்து கிராம மக்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி இரு குழந்தைகளையும் மீட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவியாக சி.பி.ஆர். அளித்து உயிர் காக்க முயன்றனர். அதன்பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
தாயின் கதறல் சோகத்தை அதிகரித்தது
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், இரு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து தனது குழந்தைகள் இருவரையும் இழந்த தாய், “என் குழந்தைகளைத் திருப்பிக் கொடுங்கள்” என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. இந்த துயர சம்பவம் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.