8 போலீசார் கொல்லப்பட்ட விவகாரம்! பிரபல ரவுடியின் கூட்டாளி போலீசாரால் சுட்டுக்கொலை!

8 போலீசார் கொல்லப்பட்ட விவகாரம்! பிரபல ரவுடியின் கூட்டாளி போலீசாரால் சுட்டுக்கொலை!



rowdy encounter in UP

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே  உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விகாஸை தேடி போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் ரவுடி கும்பலை சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அங்கு ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். ங்கு நடந்த சம்பவம் கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்த உத்தரபிரதேச போலிசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முதல்கட்டமாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய விகாஸின் நெருங்கிய கூட்டாளிகளில் மேலும் 2 பேரை உத்தரபிரதேச போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

ரவுடி விகாஸின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவை  போலீசார் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். ஹமிர்பூர் மாவட்டத்தில் போலீசாருடன் நடைபெற்ற என்கவுண்டரின் போது அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.