மக்களே உஷார்! திடீரென ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் வெடித்து... தீப்பிடித்து எரிந்தது! நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!



rajasthan-electric-scooter-catches-fire

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கானகரில் பாபா ராம்தேவ் கோவில் அருகே ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திங்கள்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்கூட்டரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் திடீர் தீ

பாபா ராம்தேவ் கோவில் அருகே மின்சார ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்து திடீரென புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் வாகனம் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனடியாக ஸ்கூட்டரில் இருந்து கீழே குதித்தார்.

இதையும் படிங்க: தடுக்க வேண்டிய குடும்பமே இப்படி வேடிக்கை பாக்குது... பேயை விரட்ட பெண்ணை செய்த கொடுமை! நீயும் ஒரு பெண் தானே... பேயை விரட்டுறியா? வெளுத்துறியா? வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

அப்போது ஸ்கூட்டரில் இருந்த குழந்தையும், அருகில் இருந்த மற்றொரு குழந்தையும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. வாகனம் திடீரென தீப்பிடித்ததால் சாலையில் இருந்தவர்கள் பதற்றமடைந்தனர்.

சிசிடிவியில் பதிவான தீப்பிடித்த காட்சிகள்

ஸ்கூட்டர் தீப்பிடித்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. முதலில் வாகனத்தில் இருந்து புகை கிளம்புவதும், பின்னர் திடீரென தீப்பற்றி எரிவதும் அதில் தெளிவாக தெரிகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஸ்கூட்டர் எந்த காரணத்தால் தீப்பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது பேட்டரி தொடர்பான பிரச்சினையா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்திருப்பது, மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் EV Safety கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: பொண்ணுங்க ட்ரெஸ் அணிந்து.... 3 குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்! அந்தக் கோலத்தை கண்டு கதறிய குடும்பம்!!!