தடுக்க வேண்டிய குடும்பமே இப்படி வேடிக்கை பாக்குது... பேயை விரட்ட பெண்ணை செய்த கொடுமை! நீயும் ஒரு பெண் தானே... பேயை விரட்டுறியா? வெளுத்துறியா? வைரலாகும் ஷாக் வீடியோ..!!!



rajasthan-woman-exorcism-assault-video

ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா பகுதியில், பேயோட்டுவதாகக் கூறி பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமுடியைப் பிடித்து இழுத்து, அறைந்ததுடன், கழுத்தில் திரிசூலத்தை வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை குடும்பத்தினரே வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பேயோட்டுவதாகக் கூறி பெண்ணை தாக்கிய கொடூரம்

பான்ஸ்வாரா பகுதியில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக குடும்பத்தினர் நம்பியதாக தெரிகிறது. இதையடுத்து, பேயை விரட்டுவதாகக் கூறி ஒருவர் அந்தப் பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துள்ளார். தொடர்ந்து அவரை அறைந்ததுடன், கழுத்துக்கு அருகே திரிசூலத்தை வைத்து அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பொண்ணுங்க ட்ரெஸ் அணிந்து.... 3 குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்! அந்தக் கோலத்தை கண்டு கதறிய குடும்பம்!!!

தடுக்க வேண்டிய குடும்பத்தினரும் அந்தக் கொடுமையை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடந்தவற்றை அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மூடநம்பிக்கையின் பெயரில் ஒரு பெண் தாக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

சமூக வலைதளங்களில் பரவும் தாக்குதல் வீடியோ

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மூடநம்பிக்கை வன்முறை குறித்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பேயோட்டுதல் போன்ற நம்பிக்கைகளை காரணமாகக் கொண்டு பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதை ஏற்க முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர தாக்குதல்களில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெண் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோவையும் அதன் பின்னணியையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: என்னுடைய வீட்டு வாசலில் ஏன் நிக்குற? முத்திய சண்டை... கன்னத்தில் பளார் அறை! ஒரு மணி நேரத்துல கொன்னுடுவேன்..! மிரட்டிச் சென்ற சில நிமிடங்களில் அண்டை வீட்டார் செய்த கொடூரம்..!!!