மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்.. அந்தரங்க உறுப்பை சிதைத்து, இரத்த வெள்ளத்தில் சாலையில் வீசிய பயங்கரம்.!

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்.. அந்தரங்க உறுப்பை சிதைத்து, இரத்த வெள்ளத்தில் சாலையில் வீசிய பயங்கரம்.!



Rajasthan Alwar District Minor Girl Sexual Abuse

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் சிறுமிகள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மேலும், விசாரணையில் ராஜஸ்தான் சிறுமிகளின் அந்தரங்க உறுப்பில் பாலியல் பலாத்காரத்திற்கு பின்னர் கூரான பொருட்களை திணித்த பயங்கரமும் அம்பலமானது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கூர்மையான பொருளை திணித்து, அவரை நகர மேம்பாலத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சிறுமி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

rajasthan

சிறுமியின் அந்தரங்க உறுப்பில் திணிக்கப்பட்ட பொருளை மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த நிலையில், சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் உள்ளுறுப்புகள் பலத்த காயம்பட்டு இருப்பதாகவும், அவற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுளள்து என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனைப்போல, குஜராத் மாநிலத்தில் உள்ள வரோதஹராவில் ஜன. 2 ஆம் தேதி சிறுமி ஒருவர் 3 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மூவரில் ஒருவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருக்கும் 2 பேரை தேடி வருகின்றனர்.