4 மாத கர்ப்பிணி மகளை ஆற்றில் தள்ளிவிட்டுக்கொன்ற தந்தை.. திடுக்கிடவைக்கும் காரணம்.. பதறவைக்கும் சோகம்.! 



Pregnant Teen Allegedly Pushed into River by Father in Uttar Pradesh Honor Killing Case

18 வயதில் காதலால் கர்ப்பமான மகளை தந்தை உறவினர்களின் அழுத்தத்தால் கொலை செய்தார். 

காதல் & கர்ப்பம்: 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 18 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவனை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், பெண்மணி 4 மாத கர்ப்பமாகி இருக்கிறார். 

இதையும் படிங்க: சொத்துக்காக மனைவி கொலை.. ஹாலிவுட் சீரிஸ் பார்த்து அரங்கேறிய சம்பவம்.. இறுதியில் ட்விஸ்ட்.! 

Crime news

 உண்மை தெரியவந்தது.. 

இந்த விஷயம் குறித்து சிறுமியின் தந்தை உட்பட உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை கொலை செய்யும் எண்ணத்துடன் சிறுமியின் தந்தை உட்பட அவரின் 3 உறவினர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.

Crime news

ஆற்றில் கொடூரம்: 

இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று 18 வயது இளம்பெண்ணை ஆற்றுக்கு அழைத்துச்சென்று கீழே குதிக்க வற்புறுத்தி இருக்கின்றனர். ஆனால், அவர் தற்கொலை செய்ய மறுப்பு தெரிவிக்கவே, தந்தை மகளை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். 

Crime news

விசாரணை: 

பின் இவர்கள் மட்டும் திரும்பி வந்த நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. இதனையடுத்து, அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர். 
 

இதையும் படிங்க: 2 வருஷமா ஒரே டார்ச்சல்... 2 மாதமாக போட்ட பலே திட்டத்தால் தீட்டிய கத்தி! ஆசிரியை படுகொலையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!!