கங்குவா ரிலீஸ் எப்போ?? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன முக்கிய பிரபலம்!!
கிளப்ஹவுஸ் காதலனை நம்பி ஆடையின்றி தோன்றிய பெண்; அடுத்து நடந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சி சம்பவத்தின் பகீர் பின்னணி.!
புதுச்சேரி மாநிலத்தை சிறந்த 18 வயது இளம்பெண், கிளப்ஹவுஸ் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் வாயிலாக சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் திலீப் குமாரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் நட்பு பின்னாளில் காதலாக மாறியதாக தெரியவருகியது. இதனால் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திலீப் குமார் காதலியிடம் ஆசையாக பேசி, நிர்வாண வீடியோ காலில் தோன்றவைத்ததாக தெரியவருகிறது.
நாட்கள் செல்லச்செல்ல திலீப்பின் நடவடிக்கை மாற்றமடையவே, பெண்மணி தனது பழக்கத்தை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற திலீப்குமார், தன்னை நீ திருமணம் செய்யாவிடில் நிர்வாண விடியோவை வெளியிடுவேன் என ஆசையாக காதலித்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்.
அதிர்ந்துபோன இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிந்து துபாயில் வேலை செய்துகொண்டு இருந்த திலீப் குமாரை இந்தியா அழைத்து வந்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், கீர்த்தி பேசுகையில், "8 மாதத்தில் 15 பெண்களுக்கு எதிரான குற்றாவளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் பெண்ணுக்கு தெரிய்ந்தவராக, முன்னாள் காதலராக, உறவினர்களாக இருக்கிறார்கள்.
பெண்கள் யாரையும் நம்பி தங்களின் தனிப்பட்ட புகைப்படம் & விடியோவை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம். உங்களின் தனிமையை அந்நேர மகிழ்ச்சியை பயன்படுத்தி படம்பிடிக்கவும் அனுமதிக்க வேண்டாம்.
பெரும்பாலும் பெண்களை மிரட்ட, பெண்களாலேயே எடுக்கப்பட்ட படங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவைபோன்ற பிரச்னையை சந்தித்தால் புகார் அளிக்கவும் தயங்க வேண்டாம். உங்களின் தனிப்பட்ட விபரம் பாதுகாக்கப்படும்" என தெரிவிக்கின்றனர்.