காயத்துடன் சாலையோரம் தவித்த முதியவர்.. உணவு ஊட்டி அரவணைத்த காவலர்.. குவியும் பாராட்டுகள்..!

காயத்துடன் சாலையோரம் தவித்த முதியவர்.. உணவு ஊட்டி அரவணைத்த காவலர்.. குவியும் பாராட்டுகள்..!



Police officer helped old man in puducherry

உடம்பெல்லாம் காயங்களுடன் சாலை ஓரத்தில் கிடந்த முதியவர் ஒருவருக்கு காவலர் ஒருவர் உணவு ஊட்டி அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்த சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மோகன். புதுச்சேரியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காரில் வந்த சிலர் முதியவர் ஒருவரை காயங்களுடன் இறக்கிவிட்டு சென்றதாகவும், அந்த முதியவர் சாலை ஓரத்தில் கிடப்பதாகவும் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர் மோகன், சாலையோரமாக காயங்களுடன் பேச முடியாத நிலையில் முதியவர் ஒருவர் இருப்பதை பார்த்துள்ளார். உடனே அவருக்கு சாப்பிட உணவு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், உடலில் இருந்த காயங்களில் அந்த முதியவர்கள் உணவை எடுத்து சாப்பிடமுடியவில்லை.

இதனால் தானே அவருக்கு உணவை ஊட்டிவிட்டுள்ளார் காவலர் மோகன். மேலும், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை வழங்கி அந்த முதியவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். காவலர் மோகனின் இந்த மனிதாபமிக்க செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.