நள்ளிரவில் மட்டும் நடமாடும் பேயா? கொலை நடுங்க வைக்கும் வீடியோ! இளைஞர்கள் துணிச்சலுடன் நடத்திய நள்ளிரவு வேட்டையால்...வெளியான பின்னணி உண்மை!!!



nashik-arai-ghost-rumour-ai-images-police-warning

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பரவிய பேய் வதந்தி ஒரு கிராமத்தை முழுவதுமாக அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மக்கள் மனதில் பயத்தை விதைத்த நிலையில், அதன் பின்னணி உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரை கிராமத்தில் பரவிய பரபரப்பு

நாசிக் மாவட்டத்தின் சதானா தாலுகாவில் உள்ள அரை (Arai) கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம மனிதர்கள் உலாவுவதாக தகவல்கள் பரவின. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உருவம் தெளிவாக தெரியாத நிழற்படங்களும், வெற்று நிலங்களில் யாரோ நடமாடுவது போன்ற வீடியோக்களும் காட்டுத்தீயாக பகிரப்பட்டன.

இதனால் கிராம மக்கள் கடும் பதட்டத்தில் ஆழ்ந்தனர். குறிப்பாக சூரியன் மறைந்த பிறகு வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாக பயந்த நிலையில், கிராமம் முழுவதும் ஒரு விதமான பதட்ட சூழல் நிலவியது.

இதையும் படிங்க: பாகனை குத்தி கொன்ற யானையிடம்... இன்று 6 மாதக்குழந்தையை கொடுத்து விபரீத சோதனை! குழந்தை அதன் காலடியில் விழுந்து.... பதறவைக்கும் காட்சி!

நள்ளிரவு ரோந்தில் இறங்கிய இளைஞர்கள் மற்றும் போலீஸ்

வதந்தியின் உண்மையை கண்டறிய கிராமத்து இளைஞர்கள் துணிச்சலுடன் களமிறங்கினர். போலீசாரும் இணைந்து நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் கண்காணித்தும் எந்தவித மர்ம நடமாட்டமும் பதிவாகவில்லை.

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்

தீவிர விசாரணையில், வைரலான புகைப்படங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. மேலும், பரப்பப்பட்ட வீடியோக்கள் வேறு இடங்களில் எடுக்கப்பட்ட பழைய காட்சிகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. சமூகத்தில் பீதியை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த செயல்கள் செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மக்களிடம் அச்சத்தை உருவாக்கிய சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சைபர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை உறுதி செய்யாமல் நம்புவது ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. வதந்திகளை தவிர்த்து, உண்மையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய செய்தியாகும்.

 

இதையும் படிங்க: காதலனை ஆசை வார்த்தை பேசி பார்க்க வர சொன்ன காதலி! அடுத்து நடந்த அதிர்ச்சி! காதலனை அதை குடிக்க வைத்து வீடியோ எடுத்து..... குடும்பம் போட்ட மாஸ்டர் பிளான்!