திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு.!
திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு.!
திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதக்கூடாது என அலகாபாத் நீதிமன்ற அதிர்ச்சி கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட திருமணமான பெண் தனது கணவருடன் பாலியல் ரீதியாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என சட்டம் உள்ளது. ஆனால், இதில் பெண்ணிற்கு விருப்பமில்லாமல் உடலுறவு கொண்டால் அது குற்றமாக கருதப்படும் என பல்வேறு நாடுகளில் சட்டமாக உள்ளது.
இந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவில் ஈடுபட்டதாக, கணவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரை தண்டிக்க முடியாது எனக் கூறி கணவரை விடுவித்துள்ளது. மேலும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், மனைவி 18 வயதிற்கு மேல் இருந்தால் திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.