"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
கண்ணை மூடிய காமம்..! ஊரடங்கு நேரத்தில் அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓடிப்போன வாலிபர்..! கேரளாவில் நடந்த பகீர் சம்பவம்..!
கண்ணை மூடிய காமம்..! ஊரடங்கு நேரத்தில் அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓடிப்போன வாலிபர்..! கேரளாவில் நடந்த பகீர் சம்பவம்..!
ஊரடங்கு சமயத்தில் நண்பனை வீட்டில் தங்கவைத்த நிலையில் அவர் நண்பனின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக திடீரெனெ பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் வேலை செய்துவந்த இடங்களிலையே மாட்டிக்கொண்டனர். அந்த வகையில், கேரளா மாநிலம் மூணாறு பகுதியைசேர்ந்த ஒருவர் எர்ணாகுளம் பகுதியில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக எர்ணாகுளத்தில் சிக்கிக்கொண்டார்.
அங்கு தங்க இடமும் இல்லாமல், சாப்பாடு வசதியும் இல்லாமல் தவித்துவந்த அவர் அதே பகுதியில் தனது பாலிய நண்பன் ஒருவன் இருப்பதை தெரிந்துகொண்டு அவருக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். நண்பனும் அவரை தனது வீட்டில் வந்து தாங்கிக்கொள்ளுமாறு அழைத்துள்ளார்.
இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக நண்பன் வீட்டில் தங்கியிருந்த அந்த நபர் மூணாறு பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் நண்பனின் வீட்டில் இருந்து செல்வதாக இல்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பன் அந்த வாலிபரிடம் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் அவர் அங்கிருந்து செல்வதாக இல்லை.
இந்நிலையில், ஒருநாள் அந்த வாலிபர் தனது நண்பனின் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் அழைத்துவந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன்னர்.
அந்த பெண் தனது குழந்தைகளுடன் தனது புது காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தனது பெயரில் தனது கணவர் வாங்கி கொடுத்த கார், தன்னுடைய நகைகளை எடுத்துக்கொண்டு புது காதலருடன் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அடைக்கலம் தேடி வந்த நண்பனுக்கு உதவி செய்ய போய் , தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்து நிற்கும் அந்த நபரின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.