அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
பெங்களூரு துயரம்... துபாயில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்.!! கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் தனது மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு நகரச் சேர்ந்தவர் தர்மசீலன். 30 வயதான இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2022 ஆம் வருடம் தர்மசீலனுக்கு, மஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மஞ்சு செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் மஞ்சுவின் தந்தையான பெரியசாமியின் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மசீலன் துபாயிலிருந்து இந்தியா திரும்பியிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் தர்மசீலன் மற்றும் மஞ்சுவின் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெரியசாமி அவர்களது அறைக்கு சென்று பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
இதனைக் கண்டு கதறி அழுத அவர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 2 உடல்களையும் கைப்பற்றி பரிசோதனை செய்தனர். மஞ்சுவின் உடலில் கத்தியால் குத்தப்பட்டதற்கான காயங்கள் இருந்துள்ளது. மேலும் தர்மசீல நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார். இதனால் தர்ம சீலன் தனது மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதன்பிறகு 2 உடல்களையும் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!