BREAKING: பழம்பெறும் நடிகை செளகார் ஜானகி கவலைக்கிடம்... மருத்துவமனையின் அதிர்ச்சி அறிக்கை..!!!
சிசேரியன் முடிந்த 4 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆன பெண்.... வீங்கிய வயிறு! கடுமையான வயிற்று வலி... ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து உறைந்த மருத்துவர்கள்…! அதிர்ச்சி சம்பவம்…!!!
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்த 19 வயது இளம் பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய பொருட்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிசேரியன் முடிந்து 4 நாட்களில் டிஸ்சார்ஜ்
பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா சுராஜ் கெய்க்வாட் (19), கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்தனர். அறுவை சிகிச்சை முடிந்த நான்காவது நாளிலேயே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இதையும் படிங்க: அடக்கடவுளே.... திறந்த கதவோடு கீழே போன லிஃப்ட்...! கதறி துடித்த அம்மா.... குலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!
தாங்க முடியாத வயிற்று வலியால் மீண்டும் மருத்துவமனை
வீட்டுக்குச் சென்ற சில நாட்களில் சந்தியாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலி தொடர்ந்து அதிகரித்ததுடன் உடல்நிலையும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது வயிற்றுப் பகுதியில் வெளிப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
வயிற்றுக்குள் இருந்த அறுவை சிகிச்சை பொருட்கள்
மேல் சிகிச்சைக்காக சந்தியா புனேவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், பிரசவத்தின்போது பயன்படுத்திய அறுவை சிகிச்சை கிளவுஸ் மற்றும் பேப்பர் நேப்கின்கள் வயிற்றுக்குள் இருந்ததாக தெரியவந்தது. அவை அகற்றப்படாமல் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சந்தியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் பீட் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மருத்துவ அலட்சியம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் விரிவான விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விளையாடப் போன சிறுவனுக்கு வாஸ்து தூண் வடிவில் வந்த எமன்...! நொடியில் 4-ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாக பலி... நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!