முன்னால் சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி கோர விபத்து.. 5 பேர் பலி., 5 பேர் படுகாயம்.!

முன்னால் சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி கோர விபத்து.. 5 பேர் பலி., 5 பேர் படுகாயம்.!


Maharashtra Pune Road Accident Lorry Accident 5 Died 5 Injured

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே - அஹ்மத்நகர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை லாரி மற்றும் கார், இருசக்கர வாகனம் ஆகியவை பயணம் செய்துகொண்டு இருந்தது. 

அப்போது, லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் பயணம் செய்த நிலையில், முன்னால் சென்றுகொண்டு இருந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி நின்றுள்ளது. 

maharashtra

இந்த விபத்தில், காரில் பயணம் செய்தவர்கள், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் என 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி துடித்தனர். 

maharashtra

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புனே காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.