நடிகை குளித்த தண்ணீர் தீர்த்தமா? ஆண்களுக்கான ஸ்பெஷல் சோப் தயாரித்து விற்பனை..!
காதலிப்பதாக நடித்து இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்து உல்லாசம் அனுபவித்த காதலன்.! கண்ணீரில் கதறும் காதலி.!

ஆன்லைனில் பழக்கமான நபருடன் காதலில் விழுந்ததால் பெண் அனுபவித்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, குர்லா கபாடியா நகரை சேர்ந்தவர் அப்துல்லா ஹமீத் கான் (வயது 31). இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு 22 வயதுடைய இளம்பெண்ணுடன் சமூக வலைத்தளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், அப்துல்லா பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார்.
இருவரும் தனியாக சந்திக்க வேண்டும் என ஆசையை வளர்த்துவிட்டு, ஹோட்டலுக்கு பெண்ணை அழைத்து சென்ற கயவன் அங்கு திருமண ஆசை காண்பித்து பலாத்காரம் செய்துள்ளான்.
இவ்வாறான செயல்கள் தொடர்ந்து வந்துள்ளது. அதிலும், ஒவ்வொரு முறையும் அப்துல்லா பெண்ணுடன் இயற்க்கைக்கு மாறான வகையில் கொண்ட பலாத்காரத்தை அரங்கேற்றி இருக்கிறார். பெண்ணும் காதலன் தன்னை திருமணம் செய்வான் என ஒத்துழைத்து வந்துள்ளார்.
இவ்வாறாக ஆண்டுகள் கடக்க, கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து அவரை சமாளித்து இருக்கிறான். இதனைத்தொடர்ந்து, பெண்மணி தற்போது திருமணம் தொடர்பாக வற்புறுத்தியும் பலனில்லை. மாறாக கடந்த மாதம் வரையில் உல்லாசமாக இருந்துவிட்டு கைநழுவ முயற்சித்து இருக்கிறான்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் அப்துல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், இளம்பெண்ணை பலமுறை இயற்கைக்கு மாறான வகையில் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டு இருக்கிறான். கட்டாய கருக்கலைப்பு துயரமும் நடந்துள்ளது.