சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து 65 வயது மூதாட்டி பலி; நள்ளிரவில் பகீர் சம்பவம்.!

சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து 65 வயது மூதாட்டி பலி; நள்ளிரவில் பகீர் சம்பவம்.!



Maharashtra Mumbai 65 Aged women died 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போரிவலி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, கால்வாய் பகுதிக்கு அருகே உள்ள தனது குடியிருப்பில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், இவர் நள்ளிரவு 01:50 மணியளவில் இரயில்வே பாலத்தை கடந்து சென்று இருக்கிறார். அச்சமயம் அவர் திடீரென சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து இருக்கிறார். 

maharashtra

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மீட்கப்பட்டு 04:15 மணியளவில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு பெண்ணின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர் எதற்காக நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தார்? தற்கொலை செய்யும் எண்ணத்தில் செயல்பட்டாரா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.