10 வருஷமா கள்ளக்காதல்! நள்ளிரவு நாடகத்தில் சிக்கிய பெண்... ஏரிக்கரையில் காதலன் செய்த பலே மோசடி! பகீர் சம்பவம்!!!



maharashtra-illicit-affair-murder-lake-jalna

மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் காதல் உறவு பின்னணியில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளாக நீண்ட உறவு, இறுதியில் பெண்ணின் உயிரை பறித்தது. தற்கொலை போல காட்ட முயன்ற காதலன் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளார்.

10 ஆண்டு உறவு… முடிவில் மோசடி திட்டம்

ஜால்னா மாவட்டம் அம்பாட் பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாபாசாகேப் ரத்தோடு என்பவருக்கும் நீண்ட காலமாக கள்ள உறவு இருந்து வந்ததாக தகவல். கணவரை விட்டு விலகி, காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பெண் இருந்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே திருமணமான ரத்தோடு, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்திலிருந்து விடுபட, கள்ளக்காதல் உறவையே முடிவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை அவன் தீட்டியிருக்கிறான்.

இதையும் படிங்க: உல்லாசத்திற்கு அழைத்த அக்காவின் கணவன்! காட்டில் ஆடு மேய்க்க சென்றவர் கண்ட அதிர்ச்சி! தர்மபுரியில் திடுக்கிடும் பின்னணி!

நள்ளிரவு நாடகம்… ஏரிக்கரையில் நடந்த சதி

நள்ளிரவில் ஏரிக்கரைக்கு வருமாறு பெண்ணை அழைத்தான். அங்கு “நம்மை உலகம் வாழ விடாது… இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம்” என்று உணர்ச்சி வசப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து கைகோர்த்து தண்ணீரில் குதிப்போம் என நம்ப வைத்து, பெண்ணை தண்ணீரில் தள்ளிவிட்டான். தானும் குதிப்பது போல நடித்த ரத்தோடு, நீச்சல் தெரிந்த காரணத்தால் சாமர்த்தியமாக கரை ஏறி தப்பியிருக்கிறான்.

தற்கொலை போல காட்ட முயற்சி....

அவரை நம்பி தண்ணீரில் இறங்கிய அந்த பெண், நீந்த தெரியாததால் உயிரிழந்தார். பின்னர் சம்பவத்தை தற்கொலை என காட்ட முயன்று, போலீசில் சரணடைந்தான்.

ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என உறுதியானது. தொடர்ந்து ரத்தோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: எனக்கு அவன் தான் வேணும்.... நீ வேணாம்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! தூக்க மாத்திரை முதல் கழுத்து நெரிப்பு வரை.... இறுதியில் போட்ட பலே நாடகம்! அதிர்ச்சி சம்பவம்!!!