வகுப்பறையில் மாரடைப்பால்  சுருண்டு விழுந்து பலியான 17 வயது மாணவி; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!



Maharashtra 12 th Class Student Died Heart Attack 

 

சமீபமாகவே மாரடைப்பு காரணமாக ஏற்படும் உயிர்பலி எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் 60 வயதை கடந்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்ற வந்த நிலையில், தற்போது சிறு வயதுடைய பிள்ளைகளுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தனுசியா காந்தி (வயது 17) மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். 

maharashtra

வகுப்பு இடைவெளியின் போது மயங்கி விழுந்தவரை ஆசிரியர்கள் விரைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அவருக்கு சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

பள்ளியிலேயே மாணவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.