விவசாய நிலத்தில் பயங்கரம்.. பெண்ணுக்கு வாயில் மதுவை ஊற்றி, கூட்டாக சேர்ந்து கற்பழிப்பு..!

விவசாய நிலத்தில் பயங்கரம்.. பெண்ணுக்கு வாயில் மதுவை ஊற்றி, கூட்டாக சேர்ந்து கற்பழிப்பு..!


Karnataka Davanagere Masarahalli Woman Sexual Abused by 2 Man Gang in Agriculture Land

கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுவை வாயில் ஊற்றி, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே, மாசரஹள்ளி கிராமத்தில் கணவரை பிரிந்த பெண்மணி, தனது சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார். பெண்மணி சமபவத்தன்று தனது சகோதரிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் அதே கிராமத்தை சார்ந்த பிரபு மற்றும் அவரது நண்பர் கிரண் ஆகியோர் வந்துள்ளனர்.

விவசாய நிலத்தில் தனியாக வேலை செய்துகொண்டு இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபு மற்றும் கிரண் அத்துமீற முயற்சித்துள்ளனர். பெண்மணி எதிர்ப்பு தெரிவித்து போராடிக்கொண்டு இருக்க, நண்பர்கள் இருவரும் சேர்ந்து மதுபானத்தை எடுத்து பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றியுள்ளனர். 

பின்னர், பெண்மணிக்கு சிறிது நேரத்தில் போதை ஏறியதும், இருவரும் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்மணி தன்னை காப்பாற்றக்கூறி தொடர்ந்து அலறவே, அவ்வழியாக வந்த பெண்ணொருவர் பெண்ணின் அபயக்குரலை கண்டு அதிர்ச்சியடைந்தவாறு விரைந்து வந்துள்ளார். இதனைக்கண்ட நண்பர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

karnataka

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்மணி காயத்தால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கவே, தாவணகெரே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், பெண்ணுக்கு மதுபானத்தை வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றிவிட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது உறுதியானது. பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தலைமறைவாக உள்ள பிரபு மற்றும் கிரணை தேடி வருகின்றனர்.