கணவனின் கள்ளக்காதல் உறவால், தற்கொலை செய்து உயிரை மாய்த்த மனைவி; கடிதம் எழுதிவைத்து சோகம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஹெக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சேத்தன் கௌடா. இவரின் மனைவி பவித்ரா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
சேத்தன் கௌடாவுக்கும் - அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு இடையே கள்ளக்காதல் பழக்கம் இருந்ததாக தெரியவருகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் பவித்ராவுக்கு தெரியவரவே, அவர் தனது கணவரை கண்டித்து இருக்கிறார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்துபோன பவித்ரா, கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பவித்ராவின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.