அண்ணி அனுப்பிய ரகசிய மெசேஜ்..! பலநாள் நினைத்தது ஒரு நாள் நடந்தது என ஆசையோடு ஓடிய இளைஞர்க்கு காத்திருந்த அதிர்ச்சி..! நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்..!!!
கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் மாயமானதாக தேடப்பட்ட இளைஞர், மறுநாள் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தீவிர விசாரணையில், அவரைக் கொலை செய்தது சொந்த அண்ணன், அண்ணி மற்றும் மைத்துனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாயமான இளைஞர் சடலமாக மீட்பு
பல்லாரி மாவட்டம் மோகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பசவனகவுடா (27). கடந்த ஜூன் 7-ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மறுநாள் பல்லாரியில் உள்ள எல்.எல்.சி கால்வாய் அருகே உடல் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அது பசவனகவுடா என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், சம்பவ இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பும் கண்டெடுக்கப்பட்டன.
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். பசவனகவுடாவின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகின.
சில மாதங்களுக்கு முன்பு பசவனகவுடாவுக்கும் அவரது அண்ணி ஸ்வேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர், ஸ்வேதாவுக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலமுறை எச்சரித்தும் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
வலையில் சிக்கிய இளைஞர்
தொடர்ந்து ஏற்பட்ட தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்வேதா, தனது கணவர் தொட்டபசவகவுடா மற்றும் சகோதரர் சதீஷிடம் இதுகுறித்து தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து மூவரும் சேர்ந்து பசவனகவுடாவை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஜூன் 7-ம் தேதி ஸ்வேதாவின் மொபைலில் இருந்து பசவனகவுடாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தனியாக வருமாறு அழைத்துள்ளனர். அங்கு வந்த அவரை தொட்டபசவகவுடா மற்றும் சதீஷ் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் உடலை கால்வாய் அருகே கொண்டு சென்று தீயிட்டு எரித்துள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மூவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சினை கொடூரமான முடிவுக்கு சென்றுள்ள இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.