உல்லாச வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டதால் நகைபறிப்பில் இறங்கிய கள்ளக்காதல் ஜோடி கைது..!

உல்லாச வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டதால் நகைபறிப்பில் இறங்கிய கள்ளக்காதல் ஜோடி கைது..!



Kanyakumari Affair Couple Arrest They Turned Thief Life

 

கணவரை பிரிந்து வசித்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாற, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கள்ளக்காதல் ஜோடி கைதாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மன்காலை பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டினா (வயது 58). இவர் நடத்தி வரும் பெட்டிக்கடைக்கு, கடந்த மாதம் 10ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடி, கிறிஸ்டினாவிடம் பழம் வேண்டும் என கேட்டுள்ளனர். 

அவர் குனிந்து பழத்தை எடுக்க முயற்சித்தபோது, அவரின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் நகையை பறித்து தப்பி சென்றது. இந்த விஷயம் தொடர்பாக அருமனை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதே போன்ற சம்பவம் தக்கலையில் நடந்தது. இதனால் இரு கொள்ளையும் ஒரே ஜோடியால் நடத்தப்பட்டதை காவல் துறையினர் உறுதி செய்தனர். 

இந்த ஜோடி குறித்து அதிகாரிகள் ஒருபுறம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள பனச்சமூடு பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஜோடியாக வந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் மேற்கூறிய திருட்டு செயலில் ஈடுபட்டு வருவது அம்பலமானது. 

kanyakumari

விசாரணையில், கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளிச்சல் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 34). இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். ஆனப்பறை பகுதியை சேர்ந்த ராஜியின் மனைவி சாந்தகுமாரி (வயது 40). இவர் கணவரை பிரித்து மகளுடன் வசித்து வருகிறார். 

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டலில் சதீஷ் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், ஹோட்டலுக்கு அருகேயுள்ள ஜவுளிக்கடையில் சாந்தகுமாரி வேலை பார்த்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாற, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடிக்கு செலவுக்கு பணம் தேவைப்பட, அதனை ஈடு செய்ய திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது. இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், குழித்துறை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.