Breaking: மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி.! மருத்துவமனையில் அனுமதி.!

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (61) அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. சாதாரண மக்கள் தொடங்கி, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (61) அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் மாநில தலைநகர் போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா என்டிடிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.
.
இதுகுறித்து முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "என் அன்பான நாட்டு மக்களே, எனக்கு கோவிட் -19 அறிகுறிகள் இருந்தன, ஒரு சோதனைக்குப் பிறகு, எனது அறிக்கை மீண்டும் நேர்மறையாக வந்தது. நான் எல்லா வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறேன், மருத்துவரின் ஆலோசனையின்படி என்னைத் தனிமைப்படுத்திக் கொள்வேன்". என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.