துணிக்கடைக்குள் ஆடையின்றி இளம்பெண்.. அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்..! 

துணிக்கடைக்குள் ஆடையின்றி இளம்பெண்.. அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்..! 



girl sexually harassed in cloth shop

 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் துணிக்கடை நடத்தி வருபவர் சுராஜ் திவாரி (வயது 23). இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் சமூகவலைத்தளத்தின் மூலமாக ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சுராஜிடம் பேசிய பெண், தான் வேலை தேடிக்கொண்டிருப்பதாக கூறியதால் தனது துணிக்கடையிலேயே வேலைதருவதாக சுராஜ் அழைத்துள்ளார். 

இதன்பின் பெண்ணும் அவரது கடையில் தினமும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2021 மார்ச் மாதத்தில் வேலை செய்துகொண்டிருந்த அந்த பெண்ணை சுராஜ் பாலியல் உறவுக்கு தவறாக அழைத்துள்ளார். இதற்கு பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரை கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

UttarPradesh

மேலும் அதை புகைப்படமாகவும், வீடியோவாகவும் தனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டு, பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இதனை பொறுக்கமுடியாத பெண் வேலையை விட்டு நின்றுள்ளார். இருப்பினும் சுராஜ் பெண்ணின் வீடு தேடிசென்று அந்த வீடியோவையும், புகைப்படத்தையும் காண்பித்து தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் பொறுமையை இழந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, புகாரின் பேரில் சுராஜ் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.