8 வயது சிறுமியின் உடலெல்லாம் காயம்; வெறிநாய் போல 28 வயது இளைஞனின் பதறவைக்கும் அதிர்ச்சி செயல்..! 



delhi-minor-girl-sexual-abuse-case-update

 

சிறுமியை தன்னுடன் அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த கொடூரனின் அதிர்ச்சி செயல் நெஞ்சை பதறவைய்த்துள்ளது. சிறுமியை கயவன் அழைத்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

சிறுமியை கடத்திய நபர்

டெல்லியில் உள்ள முபாரக்பூர் பகுதியில் வசித்து வந்த 8 வயதுடைய சிறுமி, சம்பவத்தன்று மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டார். சிறுமியை காணாது பரிதவித்த பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் புகாரை ஏற்று உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

இதையும் படிங்க: மனைவியுடன் ஹனுமான் கோவிலுக்கு நேரில் சென்று வழிபட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.!

28 வயது கூலித்தொழிலாளி

இதனிடையே, கடத்தி செல்லப்பட்ட சிறுமி காவல் துறையினரால் மீட்கப்பட்டார். அவரை பாலியல் பலாத்காரம் செய்த 28 வயதுடைய முகமது உமர் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கூலித்தொழிலாளி ஆவார். கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தவர், சம்பவத்தன்று மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். 

சைக்கோ போல உடலில் கடித்து பலாத்காரம்

அங்கு சிறுமியை பார்த்த நபர், அவர் தனியாக இருப்பதை புரிந்துகொண்ட பேச்சுக்கொடுத்துள்ளார். பின் சிறுமிக்கு பிடித்த பொருட்கள் வாங்கி தருவதாக கூறி தன்னுடன் அழைத்துச்சென்று, வீட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். கயவன் சிறுமியின் உடலில் பல இடங்களில் கடித்து சித்ரவதைக்கும் உட்படுத்தி இருக்கிறார்.

கேமிராவில் பதிவான காட்சிகள்

மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் உடலில் பல காயங்கள் இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், இவர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கும் மாறி இருக்கிறார். தற்போது போக்ஸோவில் கயவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியை இளைஞர் தன்னுடன் அழைத்து செல்லும் காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கின்றன.