4 குழந்தைகளை தனியாக வளர்த்த தந்தை! 10 வயது மகன் ஆசையாக தந்தையிடம் கேட்ட விஷயம்! கோபமடைந்த தந்தை மகனை துடிக்க துடிக்க செய்த கொடூரம்! அடுத்து நடந்த அதிர்ச்சி!

டெல்லியின் சாஹர்பூர் பகுதியில் வசிக்கும் 40 வயதான கூலித்தொழிலாளி ஒருவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், அவர் தனியாகவே தன் குழந்தைகளை வளர்த்து வந்தார்.
மழையில் விளையாட ஆசைப்பட்ட மகன்
நேற்று மழை பெய்த சமயம், 10 வயது மகன் மழையில் நனைந்து விளையாட ஆசைப்பட்டான். இதைத் தந்தையிடம் கூறியபோது, அவர் அதனைத் தடுக்க முயன்றார். ஆனால் சிறுவன் அடம்பிடித்ததால், தந்தை கோபத்தில் முடிவற்ற நடவடிக்கை எடுத்தார்.
அதிர்ச்சி சம்பவம்
கோபம் கட்டுக்கடங்காமல் போன தந்தை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனை சரமாரியாக குத்தினார். குழந்தை ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நிலையில் அருகிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: குப்பை வண்டியில் பெண்ணின் தலை! சாக்குப்பையில் கை, கால்கள்! நடந்த அதிர்ச்சி சம்பவம்! பெங்களூருவில் பயங்கரம்....
தந்தை கைது
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாவி இல்ல! அவரு என்ன தப்பு பண்ணாறு! நடுரோட்டில் மயங்கி விழும் அளவிற்கு கடைக்காரரை தாக்கிய போலீஸ் அதிகாரி! வெளியான வீடியோவால் பரபரப்பு...