விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.. 6 பேர் கைது.!

ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்து தாக்கிய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள கஞ்சிகச்சேர்லா கிராமத்தில் வசித்து வந்த தடித் இளைஞரான ஷியாம் குமார் என்பவருக்கும், ஹரிஷ் ரெட்டி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் தகராறு இருந்துள்ளது.
இதனிடையே தலித் இளைஞரான ஷாம் குமாரை தாக்க பிளான் போட்ட ஹரிஷ் ரெட்டி தனது நண்பர்கள் உதவியுடன் வாடகை கார் மூலம் ஷியாம் குமாரை கடத்தியுள்ளார். அதன் பின்னர் யாரும் இல்லாத இடத்திற்கு கடத்தி சென்று அங்கு ஷியாம் குமாரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த நிலையில் ஷியாம் குமார் குடிக்க தண்ணீர் கேட்டபோது அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இது குறித்து அவரது சகோதரர் அளித்த புகாரி அடிப்படையில் குற்றவாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.