திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை! திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!

திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை! திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!


corona possitive to groom


ஆந்திர மாநிலம் பக்திகொண்டா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. 

இந்தநிலையில் கடந்த 10-ம் தேதி தன்னுடைய திருமணத்திற்காக ஹைதராபாத் வந்துள்ளார் அந்த வாலிபர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கும் அந்த இளம்பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அன்று இரவு அந்த தம்பதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

corona

வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை கொரோனா வார்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புதுப்பெண், உட்பட அந்த திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.